மொரட்டுவ ரண்வெலி மாவத்தைக்கு அருகிலுள்ள பலகை வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய குடும்ப தலைவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாடகை வாகனம் செலுத்தும் சாரதியான குறித்த நபர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வௌியேறியுள்ளார்.
குறித்த தினத்திலிருந்து அவர் காணாமல் போயிருந்த நிலையில் காவல் துறையினர் இன்றைய தினம் சடலமாக மீட்டுள்ளனர். சடலம் மரண விசாரணைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





