கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!!

890

 

கோர விபத்து

புத்தள – கதிர்காமம் பிரதான வீதியின் கரவிலகொட்டுவ 19ஆம் கட்டை பகுதிக்கு அருகில் சிற்றூர்தி ஒன்று வீதியை விட்டு விலகிச் விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் பலியாகினர்.

அத்துடன், 4 பேர் காயமடைந்த நிலையில், மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 31 வயதுடைய உக்ரேன் பிரஜை ஒருவர் பலியானார். குறித்த உக்ரேன் நாட்டு பிரஜை பயணித்த உந்துருளி, பேருந்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.