மதுபோதையில் நபரொருவர் செய்த மோசமான செயல்!!

908

திருகோணமலை – மூதூர் பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைச்சேனை – மூதூர் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவருக்கே நேற்று இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஒன்றரை போத்தல் வடிசாராயத்தினை குடித்து விட்டு வீதியில் நின்று கொண்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு, வீதியால் சென்ற பொது மக்களையும் தூற்றியுள்ளதாக தெரிவித்து மூதூர் பொலிஸாருக்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு ஒன்று வந்துள்ளது.

முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.