வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம்!!

389

pirajaikalசர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 அன்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியாவில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் டிசம்பர் 10 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களின் விசேட உரைகளும், மனித உரிமை சார்ந்த பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற இருப்பதோடு காணாமல் போன குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு 2014 ஆம் வருடத்துக்கு தேவையான கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களினுடைய பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், மாவட்டத்தின் உள்ளூர் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உரிமையுடன் வேண்டி நிற்கின்றது.