கொல்லப்பட்ட இலங்கைப் படையினரின் சடலங்கள் எடுத்து வரப்படுகின்றன!!

260

 

கொல்லப்பட்ட இலங்கைப் படையினர்

மாலியில் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதலை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்திற்கும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றார் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் அமைதிப்படையினர் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை சர்வதேச சட்டங்களின் கீழ் யுத்தகுற்றங்களாக கருதலாம் என ஐநா செயலாளர் நாயகம் கருதுவதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைதிப்படையினர் மீதான தாக்குதல்களிற்கு காரணமானவர்களை கூடிய விரைவில் நீதியின் முன்நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் மாலி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை பலியான இலங்கை இராணுவத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.