யாழில் தாயிடம் இருந்த குழந்தை மரணம் : தந்தை நீதிமன்றில்!!

324

குழந்தை மரணம்

நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா. உத்தரவிட்டார்

வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா என்ற நான்கு மாத குழந்தை சனிக்கிழமை (26) இரவு உயிரிழந்தது.

குழந்தையின் தாயும் தந்தையும் சில தினங்களுக்கு முன்னர் பிரிந்து வாழும் நிலையில் குழந்தை இறந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை வல்வெட்டித்துறை பொலிசில் முறையிட்டுள்ளதையடுத்தெ குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.