யாழில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள்!!

796

 

ஆவா குழு

ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அண்மையில் யாழ்ப்பாணம் நாச்சிமார் அம்மன் கோயிலுக்கு அருகில் வைத்து ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கைதானவர்கள் மூன்று பேரும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்காக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.