மாவெலி ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

621

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் – பொகவந்தலாவ, மாவெலி ஆற்றிலிருந்து காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டியை சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது சொந்த தேயிலை தோட்டத்திற்கு சென்ற போது காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.