மர்ம விமானம்
பல்வேறு உபகரணங்களை எடுத்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ முகாம் ஒன்று திருகோணமலையில் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வெளியிட்ட போது அப்படி எதுவும் நடக்காது என பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் பலவேறு பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. விமான நிலையத்திற்கு வந்துள்ள இந்த விமானத்தை இலங்கை சுங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் சோதனையிட அனுமதியில்லை.
திருகோணமலையில் ஸ்தாபிக்கப்பட உள்ள அமெரிக்க இராணுவ முகாமுக்கான பொருட்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன மேலும் தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-