59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

654

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் இந்தக் கோரிக்கையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் முன்வைத்துள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களால் இலங்கை ஜனநாயகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் சபாநாயகரிடம் கேட்டுள்ளது.