24 வயது இளம்பெண்
ஈரோடு மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த தர்மன் (47), லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விஜயசாந்தி (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார். தம்பதியினருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாகவே விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த தர்மன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளான். நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, மீண்டும் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த தர்மன், மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, தோட்டத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவியின் மனைவியின் தலை மற்றும் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.
ரத்தம் பீறிட்டு வெளியேற சம்பவ இடத்தியிலேயே மனைவி துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்து தர்மனை கைது செய்திருக்கும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








