வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்!!

256

மரத்துடன் மோதிய கார்

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.