இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை : பின்னணி காரணம் என்ன?

705

 

நடிகர் தூக்கிட்டு தற்கொலை

மும்பையில் இளம் நடிகர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓஷிவாராவை சேர்ந்தவர் ராகுல் திக்சித். தொலைக்காட்சி நடிகரான இவருக்கு அண்மைகாலமாக சரியான வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், நடிக்க வாய்ப்பு இல்லாமல் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.