வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

715

இல்ல மெய்வல்லுனர் போட்டி

வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (01.02) மாலை 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேசியக்கொடியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார். அணிவகுப்பு மரியாதையை அதிதிகள் ஏற்றுக்கொண்டதுடன் நிகழ்வில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு வெற்றிக்கேடயங்களை கலந்து கொண்ட பிரதிநிதிகள் வழங்கி வைத்துள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு பாடசாலை அதிபரினால் நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கலந்து கொண்டிருந்ததுடன், கௌரவ விருந்தினராக வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான செயலாளருமான எஸ்.சந்திரகுமார், சிறப்பு விருந்தினர்களாக தூய அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.ஜெயபாலன் மற்றும் உதவி பங்குத்தந்தை நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, செந்தில் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பிரதி அதிபர், ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.