பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

290

மரண தண்டனை

ஹட்டன் நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்த நபருக்கு மரணதண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான நபர் ஒருவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்றம் இவ்வாறு மரணதண்டணை விதித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம், நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையிலேயே மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண், வைத்தியசாலையில் வைத்து வழங்கிய இறுதி வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.