வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் நீதிமன்ற வழக்குத் தாக்கலால் கைவிடப்பட்டது!!

336

உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா பெரிய கோமரசங்குளம் ஜேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக தெரிவித்தும், கல்லுடைக்கும் பணியினை முற்றாக நிறுத்துமாறு கோரியும் அந்த மலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சிதம்பரபுரம் பொலிசார் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று குறித்த மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அதனடிப்படையில் மலையில் கல் உடைப்பதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுச்சென்ற பொலிஸார் இன்றையதினம் வவுனியா நீதி மன்றில் குறித்த வழக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.

இதனால் உண்ணாவிரத போராட்டம் நேற்று மதியத்துடன் நிறைவிற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த மக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிவமோகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் சென்று கலந்துரையாடியிருந்தார்கள்.