நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மைத்திரி!!

686

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருகைத் தராமைக் காரணமாகவே இவ்வாறு அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அரசமைப்புக்கு அமைய, 3 மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தருவது கட்டாய​மானதென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த மூன்று மாத காலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றுக்கு வருகைத்தரவில்லை. இது குறித்து அண்மையில் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.