சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஹொரணை – எல்லகந்தை பகுதியில் சிறிய நீரோடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நீராட சென்ற சிறுமியொருவர் சடலத்தை கண்டுள்ள நிலையில், பின்னர் அது தொடர்பில் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் சடலம் தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ளவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
40 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையா? அல்லது இயற்கை மரணமா? என காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.