8 வயது தொடக்கம் 8 வருடங்கள் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!!

611

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை

8 வயது தொடக்கம் 8 வருடங்கள் தனது மகளை பாலியல் துஷப்பிரயோகம் செய்துள்ள தந்தை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை நொச்சியாகம காவற்துறை ஆரம்பித்துள்ளது.
சந்தேக நபர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நொச்சியாகமையில் வசிக்கும் சந்தேக நபரின் மனைவி, குருநாகல் காவற்துறைக்கு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கமைய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 16 வயதுடைய குறித்த யுவதிக்கு 8 வயது தொடக்கம் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுவதி சிறு வயது தொடக்கம் தனது தந்தையுடன் நித்திரை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த யுவதியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மகள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனால் அச்சமுற்ற யுவதி பல வருடங்கள் தாயிடம் உண்மையை மறைத்து வந்த போதிலும், தந்தையின் சித்திரவதையினை பொருத்துகொள்ள முடியாதபட்சத்தில் தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாய் தனது கணவரிடம் மகளின் முறைப்பாடு தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார். மகளின் குற்றச்சாட்டை நிராகரித்த தந்தை தனது மனைவியிடம் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உச்சகடத்தினை அடைந்ததை தொடர்ந்து, குறித்த யுவதியின் தாயார் அவ்வீட்டிலிருந்து வெளியேறி தனது பெற்றோர் வசிக்கும் வீட்டிற்கு சென்று குருநாகல் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், யுவதி மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.