பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இவர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். பவன்கல்யாணுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி நந்தினி இவரை 1997ல் திருமணம் செய்தார். பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
2007ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி மனைவிக்கு 5 கோடி ஜிவணாம்சம் கொடுத்தார். அதன் பிறகு தெலுங்கு நடிகை ரேணு தேசாய்க்கும் பவன்கல்யாணுக்கும் காதல் ஏற்பட்டது. 2009ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது பவன்கல்யாண், ரேணு தேசாய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது. இதற்கு இருவரும் பதில் அளிக்கவில்லை. பிரிவுக்கான காரணமும் தெரிய வில்லை.





