முல்லைத்தீவு இளைஞர்களின் மனிதாபிமானம் : கிணற்றில் வீழ்ந்த பசு மீட்பு!!

891

உயிருக்குப் போராடிய பசு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதி ஒன்றில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசுமாடு அப்பகுதி இளைஞர்களின் துரித செயற்பாட்டினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் மேச்சலுக்குச் சென்ற பசுமாடு ஒன்று தவறி வீழ்ந்துள்ளது. வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டபோதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்திற்கு சமூகமளிக்காததுடன் வேறு பல காரணங்களையும் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசு மாட்டினை மீட்டுள்ளதுடன் அதனை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

இளைஞர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசுவை மீட்பதில் ஒன்றிணைந்து ஈடுபட்ட செயற்பாட்டினை பார்த்த அப்பகுதி மக்களின் இளைஞர்களை வாழ்த்தியுள்ளனர்.