விபுலானந்த அடிகளாரின் மருமகள்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகளான கோமேதகவல்லி செல்லத்துரை தனது 92ஆவது வயதில் நேற்று காரைதீவில் காலமானார்.
ஓய்வுநிலை அதிபரான கோமேதகவல்லி செல்லத்துரை 1926.06.06 ஆம் திகதி பிறந்தவர். அவரை பொதுவாக கண்ணம்மாக்கா என அழைப்பதுண்டு.
காலஞ்சென்ற கோமேதகவல்லியின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 4 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.







