தொழிற்சாலையில் இயந்திரத்தினுள் சிக்குண்டு ஊழியா் பரிதாபமாக பலி!!

501

ஊழியா் பரிதாபமாக பலி

அம்பாறை, நிந்தவூர் அட்டப்பள்ளம் எனும் இடத்தில் அமைந்துள்ள அனல்மின் உற்பத்தி தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த தொழிலாளி ஒருவர் இன்று சனிக்கிழமை(09) காலை அத்தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது இயந்திரத்தினுள் அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த தொழிலாளி அட்டாளைச்சேனை தைக்காநகர் 15ஆம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் கடந்த 40 நாட்களாகவே இத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வருவதாகவும், அதன் நிமித்தம் சனிக்கிழமை காலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இயந்திரத்தினுள் அகப்பட்டு தூக்கி வீசப்பட்டு அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தொழிற்சாலை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயங்கள் காணப்படுவதுடன் இவரது சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையினை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.