இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பதினோராம் ஆண்டு மகோற்சவ பெருவிழா நேற்று10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மேற்படி மகோற்சவத்தில்
17.02.2019 ஞாயிற்றுக்கிழமை சப்பர திருவிழா
18.02.2019 திங்கட்கிழமை தேர்த்திருவிழா
19.02.2019 செவ்வாய்கிழமை தீர்த்த திருவிழா
20.02.2019 புதன்கிழமை பூங்காவன திருவிழாவும் இடம்பெறுகின்றது.