வவுனியாவில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

586

வவுனியாவில் 4.1 மில்லியன் ரூபா செலவில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் சுஜாத்தா குலத்துங்கவினால் நேற்று (13.02.2019)  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் சுஜாத்தா குலத்துங்க, வவுனியா மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உளநல பாதுகாப்பு உத்தியோகத்தர் நந்தசீலன் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார், மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.