நோயாளர் காவு வண்டி விபத்து : விபத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில்!!

675

நோயாளர் காவு வண்டி விபத்து

மட்டக்களப்பு – மண்டூர், பாலைமுனையில் நோயாளர் காவு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மண்டூர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியமையே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.