கிழங்கு உட்கொண்ட சீன பிரஜை பலி..

1026

இலங்கை மொரகஹகந்த நீர்பப்பாசன வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அறியப்படாத கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டமையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிழங்கு வகையை உட்கொண்ட மேலும் இரு சீன பிரஜைகள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சீன பிரஜை 45 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவுல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.