தலைமன்னாரில் வாகன விபத்து : இளைஞன் பரிதாபமாக மரணம்!!

503

இளைஞன் பரிதாபமாக மரணம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க முஹம்மது ஜே.ரமீஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி , 2 ஆம் கட்டை பகுதியில் நேற்று நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞன் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் உண்மை விபரங்கள் வெளியாகவில்லை.

குறித்த பெக்கோ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.