இன்று அதிகாலை மேலும் ஒரு கோர விபத்து, ஒருவர் பலி – ஐவர் பரிதாப நிலையில்!!

547

கோர விபத்து

புத்தல – மொனராகலை பிரதான வீதியில் மஹாகொடயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். சிறிய பாரவூர்தியும், பேருந்தும் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதுடன், அவர் மாலபே பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் புத்தல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, புத்தல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்