மீண்டும் மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தும் தாடி பாலாஜி!!

424

அடித்து துன்புறுத்தும் தாடி பாலாஜி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்துடன் இணைய முயற்சித்தவர் தாடி பாலாஜி.

நிகழ்ச்சி முடிந்து குடும்பத்துடன் அவர் இணைய வேண்டும் என்று மக்களே ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் தன் மனைவி நித்யா மற்றும் குழந்தையை கொடுமைப்படுத்திருக்கிறார் தாடி பாலாஜி.

இதுகுறித்து காவல் நிலையத்திலும் நித்யா புகார் அளித்துள்ளார். அதில், சேர்ந்து வாழ தொடங்கிய சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர் என்று மாதவரம் காவல் நிலையத்தில் நித்யா புகார் அளித்துள்ளார்.