இளம் குடும்பஸ்தரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்பு : வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்?

282

வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்?

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருவேறு குடும்பங்களிற்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இன்று காலை மீட்கப்பட்டிருந்த குறித்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தில் வெட்டு காயங்கள் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் சம்பவத்தில் தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டை சேர்ந்த 28 வயதுடைய கரன் என அழைக்கப்படும் அரசசிங்கம் கௌவுரியனந்தம் என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.