ஓடும் பேருந்தில் தேரருக்கு ஏற்பட்ட நிலை : முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு!!

395

முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு

ஓடும் பேருந்து ஒன்றில் திடீர் சுகயீம் அடைந்த நிலையில், சுயநினைவை இழந்து போராடிய பௌத்த தேரர் ஒருவருக்கு முன்வந்து உதவிய முஸ்லிம் நபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளன.

மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தில் பயணித்த பௌத்த தேரர் திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் சுயநினைவை இழந்தார்.

இதனால் அந்த தேரருடன் வந்த தேரர்களும் செய்தவறியாது திகைத்து நின்றனர். அத்துடன், குறித்த பேருந்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் பயணித்த போதிலும், தேரருக்கு உதவ எவரும் முன்வரவில்லை.

பலரும் உதவுங்கள், உதவுங்கள் என சத்தமிட்டனரே தவிர யாரும் உதவ முன்வரவில்லை. எனினும், பேருந்தில் பயணித்த குறித்த முஸ்லிம் நபர் விரைந்து செயற்பட்டு தேரருக்கு உதவினார்.

அத்துடன், குறித்த தேரரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையிலும், அந்த நபர் உதவி செய்திருந்தார். இது குறித்த காணொளி ஒன்று சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில், தேரருக்கு உதவிய அந்த நபருக்கு முஸ்லிம் நபருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு மழை குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.