விபத்தில் முதியவர் பலி : மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்!!

280

மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்

கிண்ணியா – சூரங்கல், கற்குழி பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சூரங்கல், கற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டள்ளதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா – முனைச்சேனை பகுதியை சேர்ந்த எம். எஸ். எம். இத்ரீஸ் என்ற 63 வயதுடைய முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.