கொழும்பிலிருந்து காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

393

விபத்து

கொழும்பிலிருந்து சென்ற காரொன்று கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை ஹட்டன் – நுவெரலியா பிரதான வீதியின் கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை நோக்கி பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்து ஏற்பட்ட போது காரில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர், அதில் காயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.