கோர விபத்தில் 6 பேர் படுகாயம்!!

989

6 பேர் படுகாயம்

பேராதனை ரியகம பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 03 வாகனங்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

நேற்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரவூர்தியின் சாரதிக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பேராதனை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.