வவுனியாவில் 14வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய் கைது!!

381

Abuseவவுனியா, கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய இராணுவ வீரரொருவரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இராணுவ வீரர் விடுமுறையிலிருந்து திரும்பிய நிலையில் தனது இராணுவ முகாமுக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை பிரப்பமடு பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கலாபோகஸ்வௌ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் அந்த இராணுவ வீரரை கைது செய்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.