பாஜகவுடன் கூட்டணி அமைப்பு தொடர்பான திமுகவின் மனநிலையை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்று கருணாநிதி கூறினார். சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி..
கேள்வி: திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா?
பதில்: பொதுவாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகளே இன்னும் தொடங்கவில்லை. எனவே யாரோடு கூட்டணி என்பது பற்றிய பேச்சே எழவில்லை.
கே: பாஜகவோடு கூட்டுச் சேரலாம் என்ற மனநிலையில் திமுக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
ப: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லமுடியாது.
கே: அண்ணா ஹசாரே மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளாரே அந்தப் போராட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?
ப: நம்பிக்கையும் இருக்கிறது, ஆதங்கமும் இருக்கிறது.
கே: திமுக பொதுக்குழுவின் முக்கியத்துவம் என்ன?
ப: நிலைமைக்கேற்ப.. என்றார் கருணாநிதி.





