இருவர் பலி
தோம்பே – ஹங்வெல்ல – நித்தபத்தர பிரதேசத்தில் இராணுவ வாகனம் ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதுண்டதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மாமியார் மற்றும் மருமகளும் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.
இராணுவ வாகனம், மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் பயணித்த உந்துருளியுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.






