துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நடிகை : கணவரின் வெறிச்செயல் : அலட்சியம் காட்டும் பொலிஸ்!!

652

துணை நடிகை சந்தியா

சென்னையில் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி துணை நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கொலையை செய்த கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் பொலிசார் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மனைவி சந்தியா தவறான பாதையில் சென்றதாகவும், இதனால் கோபத்தால் அவளை கொலை செய்தேன் என பாலகிருஷ்ணன் பொலிசிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது,

மேலும், உடலின் ஏனைய பாகங்களை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரின் தலை எங்கே என்பதுதான் முக்கிய கேள்வியாக இருந்தது. தொடர்ந்து பொலிசார் தேடி வந்த நிலையில் தற்போது அதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சந்தியாவின் பெற்றோர் அளித்துள்ள புகாரில், சந்தியாவின் உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் உடலின் முக்கிய உறுப்புகளை எடுத்து விற்கும் கும்பலுடன் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும்,

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர், மேலும், பாலகிருஷ்ணனிடம் இருந்து குழந்தைகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.