ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடிபணிந்து, பதவி விலக பேவதில்லை : தாய்லாந்தின் பிரதமர்!!

422

tailandஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, பதவியிலிருந்து விலகப் போவதில்லை என தாய்லாந்து பிரதமர் யின்லுக் சினவாத்ரா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாய்லாந்து பிரதமர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிய போவதில்லை என மீண்டும் அறிவித்துள்ளார்.

அவர் பதவியில் இருந்து உடனடியாக விலகியவுடன் மக்கள் நலனின் அக்கறை உள்ள மக்கள் பிரதமர் ஒருவர் தற்காலிகமாக பதவி ஏற்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து பாரிய அரசியல் சிக்கல் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ளது. அதேவேளை கடந்த தினங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க செயலகங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தனர் என்பது சுட்டிதாக்கதக்கது.