வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

325

பெண்ணுக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொக்கெய்ன் போதைப்பொருளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுக்கே பொலிவியா நாட்டை சேர்ந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியான பெண்ணிடம் இருந்து 2 கிலோ கிராம் 615 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தி குற்றத்தை ஏற்றுக் கொண்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, 105 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகிய 41 வயதான நபருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.