மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!!

384

அதிபருக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் குளிப்பிட்டிய நீதவான் ஜயனி எஸ்.விஜேதுங்க முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். சந்தேக நபர் பல முறை மாணவியை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பாடசாலை அதிபருக்கு எதிரான தரப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் தமது தரப்பு வாதி நிரபராதி என அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.