ரத்கம படுகொலை சம்பவம் : பொலிஸார் ஐவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

393

பொலிஸார் ஐவருக்கு ஏற்பட்டுள்ள நிலை

ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற ஐந்து அதிகாரிகளுக்கே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரத்கம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டது.

எனினும், இடமாற்றம் வழங்கப்பட்ட குறித்த ஐந்து பேரும் சேவைக்கு திரும்பாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 05 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வெளிநாடு செல்ல தடை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.