24 வயது ஆசிரியைக்கு நடந்த பயங்கரம்!!

802

ஆசிரியைக்கு நடந்த பயங்கரம்

கடவத்தை – உடுபீல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியொன்று மீது தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய உயிரிழந்த யுவதி அவரின் தந்தையுடன் சென்றுள்ள போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். குறித்த விபத்தில் அவரின் தந்தை படுகாயமடைந்த நிலையில் ராகமை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீகஹவத்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.