கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

393

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தனியார் பயணிகள் விமானமொன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹொங்கொங் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தரைறிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பயணிகள் பயணித்துள்ளனர்.

விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை கருதி விமானத்தின் எரிபொருள் கடலுக்குள் திறந்து விடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.