இலங்கையில் வட்ஸ்அப், வைபர் மூலமான உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றனவா?

658

வட்ஸ்அப், வைபர்

இலங்கையில் சகல விதமான தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் சகல தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியான செய்தி போலியானது என, தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வட்ஸ்அப், வைபர், உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் புதிய தொலைத்தொடர்பு சட்டங்களுக்கமைய கண்காணிக்கப்படுவதாக செய்திகள் பரவுகின்றது.

இவ்வாறான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.