இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள் : மக்கள் அவதி!!

603

இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள்

கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்சார தடை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் பிரதான கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட பல பிரதேசங்களுக்கு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாக மின்சார சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மீண்டும் மின்சாரம் வழங்குவதற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மாத்திரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பல பகுதிகள் இன்னும் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிய வருகிறது. திடீரென ஏற்பட்ட மின்சார தடை காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.