வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

557

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வடமாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

சிவராத்திரிக்கு அடுத்த நாள் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக மற்றுமொரு நாளில் பாடசாலை நடத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ம் திகதி மஹா சிவாராத்திரி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.