சிசுவை முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்ற தாய்
மொணராகலை கொவிந்துபுர பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த சிசுவொன்று சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு சிசுவை முச்சக்கரவண்டியில் இட்ட தாய் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டின் மீது இனந்தெரியாத ஒருவர் கல்லொன்றை வீசியுள்ள நிலையில் , அது தொடர்பில் ஆராய வௌியே வந்த வீட்டு உரிமையாளர் முச்சக்கரவண்டியில் இருந்த குழந்தையை கண்டுள்ளார்.
பின்னர் , குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , குழந்தை தற்போது சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தான் வீட்டில் இருந்து வௌியே வரும் போது அங்கிருந்து முச்சக்கரவண்டியொன்று சென்றதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். குழந்தை நேற்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பில் கொவிந்துபுர காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.