இருவர் கவலைக்கிடம்
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உந்துருளியில் மோதி விபத்து சம்பவித்துள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேன் ரக சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமை இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் காத்தான்குடி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை விபத்து இடம்பெறும் விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.